தெலுங்கு நடிகரும், சமந்தாவின் மாஜி கணவருமான நாக சைதன்யா பற்றிய சமீபத்திய தகவல் ஒன்று, இணையத்தில் பரவி பலரால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
முக்கிய தகவல்:
தனது காதல் மனைவி சமந்தாவை பிரிந்த நாக சைதன்யா தொடர்ந்து தனது படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் அமீர்கானுடன் இணைந்து லால் சிங் சத்தா படத்தில் நடித்திருந்தார். இதனை தொடர்ந்து, தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாக உள்ள NC22 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள ஒரு படத்தில், நாக சைதன்யா நடிக்க உள்ளார்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. சமீப காலமாக, சமந்தா காத்து வாக்குல ரெண்டு காதல், புஷ்பா என தமிழ் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இவரின் இந்த உத்தியை பின்பற்றி, தற்போது அவரது மாஜி கணவரும் தமிழ் பக்கம் தன் கவனத்தை திருப்பி இருக்கிறார்.
திருமணமாகி 2 ஆண்டுகளில் இறந்த பாக்யராஜின் முதல் மனைவி – ஐயோ பாவம் இவருக்குள்ள இவ்ளோ சோகமா?
இதைக் கேள்விப்பட்ட சமந்தா ரசிகர்கள், எங்க சம்மு ஓட ரூட்டை தான் நாக சைதன்யா ஃபாலோவ் பண்ணிக்கிட்டு இருக்காரு. நம்ம சமந்தா சக்ஸை நாகசைதன்யா முறியடிப்பாரானு பொறுத்திருந்து பார்க்கலாம் என்று விமர்சித்து வருகின்றனர்.