நடிகர் சிம்பு அடுத்த படத்தில் அவருடைய தீவிர ரசிகனுக்கு வாய்ப்பு கொடுத்தது மட்டுமின்றி கண்கலங்க வைக்கும் ஒரு காரியத்தையும் செய்துள்ளார். இதனால் அவருடைய ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் கூல் சுரேஷ்:
நடிகர் சிம்புக்கு கடந்த சில வருடங்களாக வெளி வந்த எல்லா திரைப்படமும் தோல்வியாக அமைந்தது. மாநாடு வெற்றி படம் மூலம் பழைய பார்முக்கு திரும்பினார். இந்த வெற்றியை தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்த வெந்து தணிந்தது காடு திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
மேலும் சிம்புவை படங்கள் கைவிட்டாலும், அவருடைய ரசிகர்கள் ஒரு போதும் கைவிட்டதில்லை. அந்த வகையில் அவரின் தீவிர ரசிகர்களில் ஒருவராக இருப்பவர் தான் நடிகர் கூல் சுரேஷ். இவர் அண்மையில் வெளியான வெந்து தணிந்தது காடு படத்தின் டைட்டில் பட்டிதொட்டியெல்லாம் பரவ செய்தவர். சமீபத்தில் நடந்த பேட்டியில், எனக்கு யாரும் உதவவில்லை எனது நண்பன் சந்தானம் மட்டும் தான் உதவுகிறார் என்று கூ\றினார்.
அடடே.., அழகுல வைரம் மாதிரி ஜொலிக்கிறீங்களே அனிகா சுரேந்தர்.., வர்ணித்து தள்ளிய இளசுகள்!!
இந்த நிலைமையில் இருக்கும் அவருக்கு சிம்பு எந்த உதவியும் செய்யவில்லையா? என்று பல விமர்சனங்கள் எழுந்து வருகிறது. இந்நிலையில் இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக நடிகர் சிம்பு ஒரு காரியத்தை செய்துள்ளார். அதாவது சிம்பு தன்னுடைய அடுத்த படத்தில் வாய்ப்பு கொடுத்தது மட்டுமின்றி அவருடைய குடும்பம் என்னுடைய குடும்பம் என்றும் அவர் வாழ்க்கையை பார்த்துக்கொள்ள நான் இருக்கிறேன் என்று கூல் சுரேஷ்க்கு உறுதியளித்துள்ளார்.