தமிழ் திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வந்த சமந்தா தற்போது ‘தி பேமிலி மேன்’ ஏற்பட்ட சர்ச்சையாக ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுள்ளார்.
‘தி பேமிலி மேன் 2’
சமந்தா முதன்முதலாக நடித்த வெப் சீரிஸான ‘தி பேமிலி மேன்’ பல சர்ச்சனைகளை ஏற்படுத்தியது. இலங்கை தமிழர்களை தவறாக சித்தரிப்பது போன்ற கதையம்சம் அமைந்திருந்ததால் தமிழர்கள் பலரும் கொந்தளித்தனர். மேலும் பல அரசியல் பிரமுகர்களும் இந்த படத்தை வெளியிட தடைகோரி வழக்கு தொடுத்தனர். ஆனாலும் இத்தனை பிரச்சனைகளையும் தாண்டி ஜூன் 4 இல் இந்த வெப் சீரிஸ் அமேசானில் வெளியானது.
இந்த கதையின் மையகருவே சென்னையில் குண்டு வைத்து சேதாரப்படுத்த இலங்கை பெண் திட்டமிடுவது போன்று தான். அதனால் தான் இந்த ட்ரைலரை பார்த்தே பல சர்ச்சைகள் எழுந்தது. மேலும் சமந்தா தான் அதில் இலங்கை பெண்ணாக தான் நடித்திருப்பார். இப்பொழுது படம் வந்து இத்தனை நாட்களுக்கு பிறகு சமந்தா ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.
அதாவது ‘தி பேமிலி மேன் 2’ படம் வெளியான பிறகு தற்போது வரை எந்த சர்ச்சையும் ஏற்படவில்லை. இந்த படத்தின் மூலம் யாரையும் புண்படுத்துவது என் நோக்கம் கிடையாது, இந்த கதாபாத்திரத்தால் யாரையாவது புண்படுத்தி இருந்தால் என்னை மன்னித்து விடுங்கள் என்றும் கூறியுள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்