இங்கிலாந்து அணி கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை 3-0 என அபாரமாக கைப்பற்றி இருந்தது. இதனை தொடர்ந்து, வரும் 27ம் தேதி தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக இங்கிலாந்து அணி 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை விளையாட இருக்கிறது. இதற்கிடைப்பட்ட நாட்களில் இங்கிலாந்து வீரர்கள் தங்களது குடும்பத்துடன் நேரத்தை செலவழித்து வருகின்றன.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த வகையில், ஐபிஎல்லில் அதிக ஏலத்திற்கு போன சாம் கரன், விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில் ஏற்பட்ட தனது அனுபவத்தை டிவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில் இவர், தெரிவித்ததாவது, விர்ஜின் அட்லாண்டிக் விமானத்தில், இவரது இருக்கை உடைந்து விட்டது என்று கூறியுள்ளார். அதற்கு, அங்குள்ள ஊழியர்கள் தன்னை (சாம் கரனை) பயணிக்க விடாமல் தடுத்தனர்.
ரோஜா சீசன் 2 க்கு ரெடியாகிறாரா பிரியங்கா நல்கரி? போட்டோவுடன் அவரே போட்ட சூப்பர் பதிவு!!
இது முற்றிலும், பைத்தியதனமானது என்றும் இந்த செயல் தனக்கு மிகவும் அதிர்ச்சியாகவும், சங்கடமாகவும் இருக்கிறது என்றும் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவுக்கு விர்ஜின் அட்லாண்டிக் நிறுவனம் மன்னிப்பு கூறி கமெண்ட் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.