அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரில் இருந்து, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் நட்சத்திர வீரர் விலகுவதாக அறிவித்துள்ளார்.
ஐபிஎல்:
டி20 உலக கோப்பை தொடர் நேற்றுடன் முடிந்த நிலையில், இந்திய ரசிகர்கள் அனைவரும் ஐபிஎல் மீது கவனம் செலுத்த தொடங்கிவிட்டனர். இதற்கு, ஏதுவாக பிசிசிஐயும் ஐபிஎலுக்கான மினி ஏலத்தை அடுத்த மாதம் 23ம் தேதி கொச்சியில் நடத்த இருப்பதாக அறிவித்திருந்தது. இந்த ஏலத்திற்கு முன்பு ஐபிஎலில் பங்குபெற உள்ள அனைத்து அணிகளும், தங்களது அணியில் இருந்து 5 வீரர்களை விடுவிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதன்படி, ஐபிஎல் அணிகள் அனைத்தும் அந்த பணியில் தீவிரமாக இறங்கி உள்ளனர். இந்நிலையில், கடந்த ஐபிஎல் சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடிய, இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ், அடுத்த ஐபிஎல் சீசனில் பங்கேற்க மாட்டேன் என்று தெரிவித்துள்ளார்.
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர்…, இப்படி ஒரு கமெண்ட்டை எதிர்பார்க்கலேயே!!
மேலும், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில் அதிக கவனம் செலுத்த உள்ளதாக கூறியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு முதல் இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடரில் விளையாடி வரும் இவர், 30 போட்டிகளில் 503 ரன்களை அடித்துள்ளார். இவர், விக்கெட் கீப்பராகவும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.