பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர்…, இப்படி ஒரு கமெண்ட்டை எதிர்பார்க்கலேயே!!

0
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர்..., இப்படி ஒரு கமெண்ட்டை எதிர்பார்க்கலேயே!!
பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்த இந்திய வீரர்..., இப்படி ஒரு கமெண்ட்டை எதிர்பார்க்கலேயே!!

டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் தோல்வி அடைத்த போது, பாகிஸ்தான் வீரர் கூறிய விமர்சனத்துக்கு முகமது ஷமி பதிலடி கொடுத்துள்ளார்.

இந்திய வீரரின் பதிலடி:

டி20 உலக கோப்பை தொடரின் இறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணிக்கு எதிராக அசத்தலான பேட்டிங் மற்றும் பவுலிங்கினால் இங்கிலாந்து அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமான வெற்றி பெற்று சாம்பியன் ஆனது. இதனால், பாகிஸ்தான் அணி இந்த உலக கோப்பை தொடரில், இறுதிப் போட்டி வரை முன்னேறி இருந்தும் பெரும் ஏமாற்றத்தை அடைந்தது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த டி20 உலக கோப்பை தொடரின் நிலை தான், பாகிஸ்தான் அணிக்கு ஆசிய கோப்பையிலும் ஏற்பட்டு இருந்தது. இதனால், பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் தொடர் ஏமாற்றத்தை சந்தித்த நிலையில், நேற்று, பாகிஸ்தான் முன்னாள் வீரர் சோயிப் அக்தர் இதயம் உடைந்தது போன்ற எமோஜியை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பனி சறுக்கில் வெள்ளி வென்ற முதல் இந்தியர்…, வரலாறு படைத்த அஞ்சல் தாக்கூர்!!

இந்த பதிவுக்கு இந்திய வீரர் முகமது ஷமி இட்ஸ் கால் கர்மா என்ற கமெண்ட் செய்துள்ளார். இவரது இந்த கமெண்டிற்கு இந்திய ரசிகர்கள் லைக் செய்து வருகிறார்கள். இதற்கு காரணம், சோயிப் அக்தர் டி20 உலக கோப்பையில் இந்திய அணி அரையிறுதியுடன் திரும்பியதற்கு, பாகிஸ்தான் அணிக்கு எதிராக இறுதிப் போட்டியில் மோதுவதற்கு தகுதி இல்லை என கிண்டல் செய்திருந்தார். இதனால், தான் முகமது ஷமி இப்படி ஒரு கமெண்ட் செய்து பதிலடி கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here