![திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி.., 35 துண்டுகளாக வெட்டி குளோஸ் செய்த காதலன்.., டெல்லியில் ஏற்பட்ட பரபரப்பு! திருமணம் செய்ய வற்புறுத்திய காதலி.., 35 துண்டுகளாக வெட்டி குளோஸ் செய்த காதலன்.., டெல்லியில் ஏற்பட்ட பரபரப்பு!](https://enewz.in/wp-content/uploads/2022/11/ff-4-3-696x522.jpg)
காதலனை திருமணம் செய்து கொள்ளுமாறு கூறிய காதலியை கொன்ற சம்பவம் டெல்லியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
படுகொலை:
சமீப காலமாக காதலித்து திருமணம் செய்யும் தம்பதிகள், ஏதாவது காரணத்திற்காக காதலனை காதலி கொள்வது, காதலியை காதலன் கொள்வது போன்ற சம்பவங்கள் நடந்த வண்ணம் இருக்கிறது. அந்த மாதிரி ஒரு சம்பவம் தான் டெல்லியில் தற்போது நடந்துள்ளது. அதாவது மும்பையில் உள்ள தனியார் கால் சென்டர் நிறுவனத்தில் ஷ்ரத்தா என்ற பெண்ணும், அமிதாப் என்ற இளைஞனும் பணிபுரிந்து வந்துள்ளனர். அப்போது இருவருக்கும் ஏற்பட்ட பழக்கம் காதலாக மாறிய நிலையில், அவர்களின் பெற்றோர்களுக்கு இந்த காதல் விவகாரம் தெரிந்து ஒப்புக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் அமிதாப் மேல் இருந்த காதல் மோகத்தால் அவருடன் டெல்லிக்கு தப்பி சென்று, இருவரும் ஒரே வீட்டில் லிவிங் டு கெதர் என்ற ரீலேஷன் ஷிப்பில் வாழ்ந்து வந்தனர். நாளடைவில் காதலி ஷ்ரத்தா தன்னை கல்யாணம் செய்து கொள்ளுமாறு அமிதாப்பை தொடர்ந்து டார்ச்சர் செய்திருக்கிறார். இதனால் கோபமான அமிதாப் தன்னுடைய காதலி என்று கூட பாராமல் அவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது மட்டுமல்லாமல், ஷ்ரத்தா உடலை 35 துண்டுகளாக வெட்டி பிரிட்ஜில் பதுக்கி உள்ளான்.
ரக்ஷிதா-தினேஷ் தம்பதிகள் பற்றி வெளியான உண்மை தகவல்.., அப்போ அது நடக்கவே இல்லையா??
இதை தொடர்ந்து ஷ்ரத்தாவின் அப்பா அவரை தேடி டெல்லிக்கு சென்ற போது மகள் இல்லாததால் , டெல்லி காவல் துறையிடம் புகார் தெரிவித்துள்ளார். அவரின் புகார் அடிப்படையில் அமிதாப் என்பவரை கைது செய்து விசாரணை தொடங்கினர். விசாரணையின் போது ஷ்ரத்தாவை கொன்று துண்டு துண்டாக வெட்டி ஒவ்வொன்றாக தூக்கி எறிந்தேன் என்று காவல் துறையிடம் ஒப்புக் கொண்டதாக கூறப்படுகிறது.