நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அவ்வப்போது சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகிய வண்ணம் உள்ளது. அந்த வகையில் இப்போது கேரள மாநிலத்தில் பணிபுரியும் அங்கன்வாடி ஊழியர்களுக்கு சம்பள உயர்வு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது கேரள மாநிலத்தில் கிட்டத்தட்ட 60, 000 க்கும் மேற்பட்ட அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு இதுவரை ரூ.12, 000 சம்பளமாக வழங்கப்பட்டு வந்தது.
அதேபோன்று உதவியாளர்களுக்கு ரூ.8000 வழங்கப்பட்டு வந்தது. கடந்த 10 ஆண்டுகளாக இவர்களுக்கு சம்பள உயர்வு குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாத நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி அங்கன்வாடி பணியாளர்களுக்கு ரூ.1000, மற்ற உதவியாளர்களுக்கு ரூ.500 சம்பளம் உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பள உயர்வு ஜூலை மாதத்தில் இருந்து நடைமுறைக்கு வரும் என தெரிவித்துள்ளனர். மேலும் இந்த ஊதிய உயர்வால் அங்கன்வாடியில் பணியாற்றும் 60,232 தொழிலாளர்கள் பயனடைவார்கள் என மாநில அரசு தெரிவித்துள்ளது.