நாடு முழுவதும் காய்கறி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து வருவதால், சாமானிய மக்கள் உள்ளிட்ட பலரும் கடும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு மானிய விலையில் பொருட்களை வழங்க மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அந்த வகையில் மத்திய அரசின் NCCF, மானிய விலையில் பருப்பு வகைகளை தமிழகத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது.
“பாரத் டால்” எனும் பெயரில், மாவட்டந்தோறும் நகரங்கள், கிராமங்களில் உள்ள முக்கிய இடங்களில் 50 நடமாடும் வேன்கள் மூலம் கடலைப்பருப்பு விற்பனை செய்யப்படுகிறது. கூடிய விரைவில் வேன்களின் எண்ணிக்கை 100-ஆக உயா்த்தப்படுவதோடு அரிசி, கோதுமை, பாசிப்பருப்பு போன்ற புதிய ரகங்களும் வினியோகம் செய்யப்பட உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
”லால் சலாம்” படத்தில் AI மூலம் மறைந்த பாடகர்களின் குரல்., ஏஆர். ரஹ்மான் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி!!