ஒவ்வொரு மாநில அரசும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு பல நல திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழக அரசு மக்களுக்காக புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளது. அதாவது ”உங்களை தேடி உங்கள் ஊரில்” என்ற திட்டம் குறித்து அரசு ஒரு முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி ஒவ்வொரு மாதமும் 4 ஆவது புதன்கிழமை மாவட்ட கலெக்டர் ஒரு தாலுகாவை தேர்ந்தெடுத்து அங்கு ஒரு நாள் முழுமையாக தங்கி அரசு அலுவலகங்களை ஆய்வு செய்ய வேண்டும். மேலும் அரசின் நலத்திட்டங்களும் முறையாக மக்களுக்குச் சென்றடைகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும். இதோடு மக்களின் குறைகளை கேட்டறிந்து, அரசின் நலத்திட்டங்கள் அவர்களை தங்கு தடையின்றி சென்றடைவதே உறுதி செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு.., அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட மாநில அரசு!!!