டெஸ்ட் போட்டிகளில் ‘யார்கர்’ நடராஜனை களமிறக்கலாம் – சச்சின் டெண்டுல்கர் கருத்து!!

0

ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டிகளில் சிறப்பாக விளையாடிய தமிழக வீரர் நடராஜனை நடக்கவிருக்கும் டெஸ்ட் போட்டிகளில் சேர்க்க பரிசீலிக்கலாம் என்று இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான சச்சின் கருத்து தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியா உடன் போட்டிகள்:

கடந்த மாதம் இந்திய அணி பல தொடர் போட்டிகளை விளையாட ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணமாக சென்றது. ஆஸ்திரேலியா அணியுடன் ஒரு நாள் போட்டிகள் மற்றும் டி 20 போட்டி தொடர்களில் விளையாடியது. இந்த முறை ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடியதால் தமிழக வீரர் நடராஜனுக்கு இந்திய அணியில் இடம் பெற வாய்ப்பு கிடைத்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அந்த வாய்ப்பினை சரியாக பயன்படுத்தி கொண்ட நடராஜன் அவர் பங்கேற்ற முதல் சர்வதேச போட்டியான டி 20 போட்டியில் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அவரது அபாரமான பந்து வீச்சு காரணமாக இந்திய அணி ஜெயிக்க வழிவகை செய்தார். அவரது விளையாட்டு திறனை கண்டு இந்திய வீரர்கள் முதல் வெளிநாட்டு வீரர்கள் வரை ஆச்சரியம் அடைந்து அவரை பாராட்டி வந்தனர். கேப்டன் விராட் கோஹ்லி ஒரு படி மேலே போய் கோப்பையினை அவர் கையில் கொடுத்துவிட்டார்.

உடற்தகுதியை நிரூபித்த ரோஹித் சர்மா – ஆஸ்திரேலியா தொடரில் பங்கேற்பாரா??

இந்த நிலையில் வரும் 17 ஆம் தேதி ஆஸ்திரேலியா அணிக்கும் நமது அணிக்கும் டெஸ்ட் போட்டி தொடர்கள் நடைபெற உள்ளது. இந்த போட்டிகளில் இந்திய வீரர் இஷாந்த் சர்மா பங்கேற்கிறாரா? என்று சரி வர தெரியவில்லை. அவருக்கு பதிலாக நடராஜனை போட்டிகளில் பங்கேற்க வைக்கலாம் என்று கிரிக்கெட் உலகின் “ஜாம்பவான்” சச்சின் கருத்து தெரிவித்துள்ளார். அவர் கூறிருப்பதாவது, “அணியில் இஷாந்த் சர்மா இடம் பெறாத நிலையில், நடராஜனை பங்குபெற வைக்க பரிசீலனை செய்யலாம். காரணம், அவர் ஏற்கனவே விளையாடிய போட்டிகளில் சிறப்பாக விளையாடியுள்ளார். இது எனது தனிப்பட்ட கருத்து” இவ்வாறாக தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here