சபரிமலை மண்டல மகர விளக்கு ஸ்பெஷல்: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்து., TNSTC அறிவிப்பு!!!

0
சபரிமலை மண்டல மகர விளக்கு ஸ்பெஷல்: தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் இருந்து சிறப்பு பேருந்து., TNSTC அறிவிப்பு!!!

சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் சென்னை, மதுரை உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனத்துக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு தமிழக அரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அதன்படி வருகிற 15ஆம் தேதி முதல் அடுத்த 2024 ஜனவரி 16ஆம் தேதி வரை மதுரை, திண்டுக்கல், திருச்சி, பழனி ஆகிய பகுதியில் இருந்து குமுளிக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளனர். அங்கிருந்து சபரிமலைக்கு செல்ல கேரள மாநில போக்குவரத்து கழகத்தின் மூலம் இணைப்பு பஸ்கள் அதிக அளவில் இயக்கப்படுகின்றன. அதேபோல் டிசம்பர் 27 ஆம் தேதி மண்டல பூஜையை முன்னிட்டு சுமார் 100 பேருந்துகளும், 2024 ஜனவரி 15ஆம் தேதி மகர ஜோதியை முன்னிட்டு தேவைக்கு ஏற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

Enewz Tamil WhatsApp Channel 

பள்ளி மாணவர்களே…, இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…, புதிய நடவடிக்கை எடுக்கும் டெல்லி அரசு!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here