பள்ளி மாணவர்களே…, இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது…, புதிய நடவடிக்கை எடுக்கும் டெல்லி அரசு!!

0
பள்ளி மாணவர்களே..., இனி ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது..., புதிய நடவடிக்கை எடுக்கும் டெல்லி அரசு!!
ஒவ்வொரு மாநில அரசும், பள்ளி மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் கற்பித்தலை உறுதிப்படுத்தும் நோக்கில் பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு கொண்டுவரப்பட்ட நடவடிக்கை தான், டெல்லியில் அனைத்து வகுப்பறையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவது. பெரும்பாலான பள்ளிகளில் தற்போது பொருத்தப்பட்டுள்ள நிலையில், புதிய நடவடிக்கை மேற்கொள்ள டெல்லி பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
அதாவது, வகுப்பறைகளில் உள்ள சிசிடிவி கேமராக்களை நேரடியாக பெற்றோருக்கு வழங்க நடவடிக்கை எடுக்க உள்ளதாக டெல்லி அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக அரசாங்கம் “DGS லைவ்” என்று அழைக்கப்படும் மொபைல் செயலி ஒன்றை உருவாக்கியுள்ளது. இந்த திட்டம் குறித்து அதிகாரி ஒருவர், ஆசிரியர் சரியான நேரத்தில் வகுப்பிற்கு வருகிறார்களா? வகுப்பில் முறையான கற்பித்தல் நடப்பதை பெற்றோருக்கும் உறுதியளிக்கு வகையிலும் இந்த திட்டம் இருக்கும் எனவும், பள்ளியில் ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் விசாரணைக்கு உதவும் எனவும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here