மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில், கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு தொடர் கனமழை பெய்தது. இதனால் பெரும்பாலான குடியிருப்பு பகுதிகள் வெள்ள நீரில் சூழ்ந்ததோடு, பொதுமக்களும் வாழ்வாதாரத்தை இழந்து உள்ளனர். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இதற்கிடையில் தமிழ்நாடு அரசு மேற்கொண்ட நிவாரண பணிகளை ஆய்வு செய்ய மத்திய குழு நேற்று (டிச. 11) தமிழகத்திற்கு வருகை தந்தது. அதன்படி பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட மத்திய குழு கூறுகையில், “மழை அதிகமாக பெய்ததால், தண்ணீர் அதிக அளவில் தேங்கி உள்ளது. இருந்தாலும் வெள்ள மீட்பு பணிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக மேற்கொண்டுள்ளது.” என பாராட்டி உள்ளார்.