பிரசித்தி பெற்ற தளங்களில் ஒன்றான சபரிமலை ஐயப்பன் கோவிலில் மண்டல, மகர விளக்கு பூஜை மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது. இரண்டு மாத காலம் நடைபெறும் பூஜையில், விரதமிருந்து ஐயப்பனை தரிசனம் செய்ய எண்ணற்ற பக்தர்கள் அனுதினமும் வருகை தருவார்கள். இந்நிலையில் மண்டல பூஜைக்காக வருகிற 16 ஆம் தேதி மாலை 5 மணிக்கு நடை திறக்கப்படும் என தேவஸ்தானம் அறிவித்துள்ளது.
உலக கோப்பை அரையிறுதியில் இந்தியா-பாக் மோத இது தான் வழி? வாசிம் அக்ரம் போட்ட ஸ்கெட்ச் பிளான்!!!
இதற்கிடையில் இன்று (நவ.10) சித்திரை ஆட்டத் திருநாளையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற இருப்பதால், மாலை 5 மணிக்கு சபரிமலையில் நடை திறக்கப்படும். இதைத்தொடர்ந்து புஷ்பாபிஷேகம், படி பூஜை முடிவடைந்த பிறகு இரவு 10.30 மணி அளவில் நடை அடைக்கப்படும் என தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.