சன் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ரோஜா சீரியலில் நடித்து வரும் பிரியங்கா தற்போது தனது அம்மாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
ரோஜா பிரியங்கா
ரோஜா சீரியல் தற்போது சுவாரசியமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. ரோஜா தான் தன் உண்மையான மகள் என்று தெரியாமல் டைகர் மாணிக்கம் தன்னை ஏமாற்றி கொண்டிருக்கும் ப்ரியாவை நம்பி வருகிறார். அணு என்ற பெயரில் இத்தனை நாட்கள் அனைவரையும் ஏமாற்றி வந்த பிரியா தற்போது உயிருக்கு போராடி வருகிறார்.
அவரை மடியில் இருந்து தள்ளி விட்டது ரோஜா தான் என்று டைகர் மாணிக்கம் சாட்சி சொல்கிறார். இந்த உண்மை எப்பொழுது தெரிய வரும் என்று பலரும் இந்த சீரியலை ஆவலுடன் பார்த்து வருகின்றனர். அர்ஜுனும் ரோஜாவை காப்பாற்ற தொடர்ந்து போராடி வருகிறார்.
டைகர் மாணிக்கம் எல்லைக்கு மீறி சென்று ரோஜாவை கொலை செய்ய முடிவெடுத்து விட்டார். இந்நிலையில் தான் தற்போது அர்ஜுன் ஜெயிலுக்கு சென்று ராஜாவிற்கு பக்கபலமாக இருக்கிறார். இதில் ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பிரியங்கா தனது அம்மாவுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.