தன்னுடன் செல்பி எடுத்துக்கொள்ள ரூ.100 கட்டணம் – அமைச்சர் அறிவிப்பு!!

0
மாநில சுகாதார துறை அமைச்சர் உஷா தாக்கூர் தன்னுடன் செல்பி எடுத்துக் கொள்வதற்கு நூறு ரூபாய் கட்டணம் என அறிவித்துள்ளார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த பெண் சுகாதார துறை அமைச்சர் உஷா தாகூர் சற்று வித்தியாசமான அறிவிப்பை மக்களுக்கு விடுத்துள்ளார். அதாவது தன்னுடன் செல்பி எடுத்துக்கொள்ள விரும்பும் பொது மக்கள் நூறு ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என்று அறிவித்துள்ளார்.
மேலும்,  இதற்கான காரணத்தை தெரிவித்த அவர் ஒவ்வொரு மக்களிடம் நின்று செல்பி எடுத்துக்கொள்ள நேரமாவதால் பொது நிகழ்ச்சிகளுக்கு செல்ல தாமதமாகிறது. எனவே இந்த கட்டண முறை கொண்டு வந்து இருப்பதாக உஷா தாகூர் தெரிவித்து உள்ளார்.
இவ்வாறு வசூலிக்கப்படும் நூறு ரூபாய் பணத்தை கட்சியின் செயல்பாடுகளுக்கு வழங்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளார். இவர் சில நாட்களுக்கு முன் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் பிஎம் கேர்ஸ் நிதிக்கு 500 ரூபாய் நன்கொடை வழங்க வேண்டும் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here