சர்வதேச இந்திய அணியானது, இங்கிலாந்துக்கு எதிராக 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட இருக்கிறது. இத்தொடர் வரும் ஜனவரி 25 முதல் மார்ச் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன. இவ்விரு அணிகள் மோதும் முதல் போட்டி ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்போது இதற்காக ஹைதராபாத் சென்றுள்ள இந்திய வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
அதன்படி தற்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா வலைப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். குறிப்பாக ஜடேஜா வீசும் பந்துகளை சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை பறக்க விடுகிறார். இதை அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் உன்னிப்பாக கவனித்துப் பார்க்கிறார். அடுத்தடுத்து இந்திய அணிக்கு உலக கோப்பை போன்ற முக்கிய தொடர்கள் வர உள்ளதால் ரோகித் சர்மாவுக்கு இந்த தொடர் மிக முக்கியமானதாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.