நாடு முழுவதும் ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மானிய விலையில் எல்பிஜி சிலிண்டர்களை மத்திய அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் வர இருப்பதால், எல்பிஜி சிலிண்டருக்கான மானிய தொகையை அதிகரித்து வருவதாக தகவல் வெளிவந்துள்ளது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதத்தில் வீட்டு உபயோக கேஸ் சிலிண்டரின் விலை ரூ.200 குறைக்கப்பட்டது. இதனால் பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்ட பயனாளிகளுக்கு ரூ.400 மானியம் கிடைக்கப்பட்டது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த அறிவிப்பு பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்று வருவதால், மானியத் தொகையை மேலும் உயர்த்த, மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதன்படி இம்முறை ரூ.300 வரை மானியம் இருக்கலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இருந்தாலும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய அரசே வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.
மது பிரியர்களே.., இந்த 2 நாட்கள் மதுக்கடைகள் செயல்படாது.., வெளியான முக்கிய அறிவிப்பு!!!