தமிழகத்தில் திருவிழாக்கள், தலைவர்கள் தினம் போன்ற நாட்களின் போது எந்தவித அசம்பாவிதமும் ஏற்படக் கூடாது என்பதற்காக அந்தந்த மாவட்டங்களில் உள்ள மதுக்கடைகளை மூடுவது வழக்கம். அந்த வகையில் இன்று ராமர் கோவில் திறப்பு விழாவை முன்னிட்டு நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னை மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது சென்னையில் வரும் ஜனவரி 25ஆம் தேதி வள்ளலார் நினைவு தினம் அனுசரிக்கப்பட உள்ளது. இதை தொடர்ந்து ஜனவரி 26 ஆம் தேதி குடியரசு தின விழா கொண்டாடப்பட உள்ளது. இதன் காரணமாக சென்னை மாவட்டம் முழுவதும் இந்த இரு தினங்களில் டாஸ்மாக் கடைகள் செயல்படாது என தெரிவித்துள்ளனர். மேலும் மதுபான சில்லறை விற்பனை கடைகள், மது கூடங்கள், கிளப், ஹோட்டல்களை சார்ந்த மதுக்கூடங்களும் மூட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.
TET தேர்வர்களே., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டுமா? அப்போ இது ரொம்ப முக்கியம்? மிஸ் பண்ணிடாதீங்க!!!