சர்வதேச இந்திய அணியானது தற்போது ஆசிய கோப்பை தொடரில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த ஆசிய கோப்பை தொடரில், இந்திய அணி வரும் செப்டம்பர் 10 ஆம் தேதி பாகிஸ்தான் அணியை சூப்பர் 4 சுற்றில் எதிர்கொள்ள தயாராகி வருகிறது. ஏற்கனவே இந்த இரு அணிகளும் மோத இருந்த லீக் போட்டியானது மழை காரணமாக தடைப்பட்டது. இதனால், எதிர்வரும் போட்டியை வெல்லும் முனைப்புடன் ரோஹித் சர்மா தலைமையிலான இந்திய அணி தீவிர பயிற்சி செய்து வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில், ரோஹித் சர்மா படைத்த மாபெரும் சாதனை ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது, இந்த ஆசிய கோப்பையில் நேபாள அணிக்கு எதிரான போட்டியில் இவர் 74* ரன்கள் எடுத்ததன் மூலம், நடப்பு வருடம் மட்டும் இவர் விளையாடிய மூன்று வடிவ போட்டிகளில் 1008 ரன்கள் கடந்துள்ளார். இதனால், 2023 ல் சர்வதேச கிரிக்கெட்டில் 1,000 ரன்களை கடந்த முதல் கேப்டன் என்ற பெருமையை ரோஹித் சர்மா தட்டிச் சென்றுள்ளார்.
தமிழக வாகன ஓட்டிகளே…, இனி இந்த இடத்தில வண்டியை நிறுத்தினா அவ்ளோ தான்…, மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை!!