இனி வரும் போட்டிகளில் இந்திய அணிக்காக சில விஷயங்களை மாற்றிக் கொள்ள விரும்புகிறேன் என ரோகித் சர்மா பேட்டியளித்துள்ளார்
ரோகித் சர்மா
இந்திய அணி இப்போது சொந்த மண்ணில் நியூசிலாந்துக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடி வருகின்றனர். இதற்கான முதல் இரண்டு போட்டிகளிலும் இந்திய அணி வீரர்கள் அபாரமாக செயல்பட்டு தொடரை கைப்பற்றியுள்ளனர். இதை தொடர்ந்து 3 வது ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடைபெற இருக்கிறது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்று விட்டால் ODI தொடரை நியூசிலாந்துக்கு எதிராக ஒயிட் வாஷ் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்நிலையில் ரோகித் சர்மா அளித்துள்ள பேட்டி வைரலாகி வருகிறது. இவர் கடந்த இரண்டு போட்டியிலும் இந்திய அணி பந்து வீச்சாளர்கள் உண்மையிலேயே அற்புதமாக விளையாடி விக்கெட்களை கைப்பற்றினார்கள். இவர்களது ஆட்டம் தான் இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. மேலும் நான் இப்போது சரியாக விளையாடவில்லை என்று எனக்கே நன்றாக தெரியும்.
ஆனால் இனி வரும் போட்டிகளில் கண்டிப்பாக நான் இந்திய அணிக்காக அதிக ரன்கள் குவிப்பேன். மேலும் எனது பேட்டிங் ஸ்டைலையும் மாற்றிக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். இதை வைத்துப் பார்க்கும்போது ரோகித் சர்மா இந்த ஆண்டு ஒரு நாள் உலகக் கோப்பை தொடரில் எதிரணிக்கு மிகப்பெரிய சிம்மசொப்பனமாக இருந்து மாற்றத்தை நிகழ்த்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இவரின் இந்த பேட்டியை பார்த்த எதிரணி வீரர்கள் சற்று கலக்கத்தில் உள்ளனர்.