பாக்கியலட்சுமி சீரியல் இப்போது பல சுவாரசியமான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. கோபி வீட்டை விற்க போகிறேன் என்று சொன்னவுடன் எழில் எப்படியாவது இந்த வீட்டை தனது அம்மாவுக்காக வாங்கி கொடுக்க வேண்டும் என போராடுகிறார். அவரால் எவ்வளவு போராடியும் பணத்தை ஏற்பாடு செய்ய முடியவில்லை. இன்னொரு பக்கம் எழில், அமிர்தா காதல் விஷயத்தை தெரிந்து கொண்ட ஈஸ்வரி வீட்டையே இரண்டாகி விடுகிறார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
ராமமூர்த்தி எழிலிடம் எவ்வளவு சொல்லியும் அவர் மனசு மாறுவதாக இல்லை. மேலும் ஈஸ்வரி நீ வர்ஷினியை தான் திருமணம் செய்து கொள்ளணும் என கட்டாயப்படுத்துகிறார். இப்படி சீரியல் விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நேரத்தில் இந்த சீரியல் குறித்து புது அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது ராதிகா, பாக்கியா அனைவரும் திருமணத்திற்கு தயாரானது போன்ற புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது.
படத்துக்காக முழு சொத்தையும் அடமானம் வைத்த கங்கனா ரனாவத்.., பாலிவுட் நடிகை குமுறல்!!!
இதை வைத்து பார்க்கும் போது இனி வரும் எபிசோடுகளில் ஈஸ்வரி வீட்டில் உள்ள அனைவரையும் கட்டாயப்படுத்தி எழில் வர்ஷினிக்கு திருமண ஏற்பாடு செய்ய உள்ளாராம். எழில் எவ்வளவு மறுத்தும் நீ இதுக்கு சம்மதிக்கவில்லை என்றால் கண்டிப்பாக நான் உயிரோடு இருக்க மாட்டேன் என பிளாக்மெயில் பண்ணுவாராம். இதனால் அடுத்து வரும் எபிசோடுகளில் எழில் அமிர்தா காதல் விஷயம் என்ன ஆகும் என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.