T20 World Cup : பிளேயிங் லெவன் பற்றி நல்ல முடிவு என்கிட்ட இருக்கு – பகீர் கிளப்பிய கேப்டன் ரோஹித் சர்மா!!

0
T20 World Cup : பிளேயிங் லெவன் பற்றி நல்ல முடிவு என்கிட்ட இருக்கு - பகீர் கிளப்பிய கேப்டன் ரோஹித் சர்மா!!
T20 World Cup : பிளேயிங் லெவன் பற்றி நல்ல முடிவு என்கிட்ட இருக்கு - பகீர் கிளப்பிய கேப்டன் ரோஹித் சர்மா!!

டி20 உலக கோப்பையில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பிளேயிங் லெவனில் யாரை களமிறங்குவது என ரோஹித் தெளிவான முடிவு வைத்துள்ளதாக கூறியுள்ளார்.

ரோஹித் சர்மா:

டி20 உலக கோப்பைக்கு தயாராகி வரும் இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக பயிற்சி போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்தது. இதில், நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் இந்தியா வெற்றி பெற கடைசி ஓவர் வரை காத்திருக்க வேண்டியதாக இருந்தது. இதையடுத்து, இந்திய அணி நாளை நியூசிலாந்து அணிக்கு எதிராக பயிற்சி ஆட்டத்தை விளையாட இருக்கிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதனை தொடர்ந்து, இந்திய அணி உலக கோப்பையில் தனது பரம எதிரியை வரும் 23ம் தேதி எதிர்கொள்ள உள்ளது. தற்போது, இந்திய கேப்டன் ரோஹித் சர்மா இந்திய அணி குறித்து சில கருத்துக்களை வெளியிட்டு உள்ளார். அதில், குறிப்பாக இந்திய பவுலர்களில் யாரை பிளேயிங் லெவனில் பயன்படுத்துவது என்று நல்ல ஒரு தெளிவு என்னிடம் உள்ளது என்று கூறியுள்ளார்.

ஒரு ரன்னில் தலைகீழாக மாறிய ஆட்டம்.., T20WC-ல் நுழைய வாய்ப்பே இல்லை..,கடைசில இப்படி ஆயிடுச்சே!!

நேற்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பயிற்சி போட்டியில் பேட்டிங், பவுலிங் மற்றும் பில்டிங் என அனைத்திலும் சிறப்பாகவே இந்திய அணி செயல்பட்டது. இதனால், இந்த போட்டியின் மூலம் யார் யாரை பிளேயிங் லெவனில் தேர்வு செய்யலாம் என முடிவுக்கு ரோஹித் வந்திருப்பார் என தெரிகிறது. நாளை நடைபெற இருக்கும் பயிற்சி போட்டியில் இந்திய அணியின் உறுதியான பிளேயிங் லெவனை காணலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here