தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் கணவரை இழந்த பெண்கள் கண்ணியத்துடன் வாழ்வதற்கான நலத்திட்டங்களை மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது ஜார்க்கண்ட் மாநிலத்தில் 2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.128 பில்லியன் பொது பட்ஜெட்டை, அம்மாநில முதல்வர் சம்பாய் சோரன் தலைமையில் தாக்கல் செய்யப்பட்டது.
விவசாயிகள், வீடுகளுக்கு இலவச மின்சாரம்., ₹20,477 கோடி நிதி ஒதுக்கீடு.., வெளியான அறிவிப்பு!!!
அதில் மறுமணம் செய்து கொள்ளும் கைம்பெண்களுக்கு 2 லட்சம் ரூபாய் உதவித்தொகை வழங்கும் திட்டமும் இடம்பெற்றுள்ளதாக அறிவித்துள்ளனர். இந்த உதவித்தொகை, சமூகத்தில் விதவைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காகவும், வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும் உதவும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இத்திட்டம் பெண்கள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் வரவேற்பை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.