தமிழ் சினிமாவில் தளபதி, நாயகன் போன்ற பல வெற்றிப் படங்களை கொடுத்து ரசிகர் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் மணிரத்தினம். கடந்த ஆண்டு இவர் இயக்கத்தில் உருவான பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் பாகம் 2 திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடி அனைவரின் கவனத்தை ஈர்த்தது. மேலும் அந்த வருடத்தில் எந்த திரைப்படமும் அள்ளாத அதிக வசூலை அள்ளி சாதனை படைத்தது. இப்படிப்பட்ட மணிரத்தினத்தைப் போலவே ஒரு காலகட்டத்தில் மற்றொரு இயக்குனரும் இவருக்கு நிகராக வளர்ந்து வந்தார். அவர் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அதாவது பாலிவுட் சர்ச்சை நாயகன் என்றால் அனைவரின் நினைவுக்கும் வருவது இயக்குனர் ராம் கோபால் வர்மா தான். இவர் அரசியல், குற்றப் பின்னணி இவற்றை மையமாக வைத்து பல பிளாக்பஸ்டர் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனர் வரிசையில் இடம் பிடித்தார். ஆனாலும் இவரது Personal கேரக்டர் காரணமாக பல சர்ச்சைகளில் சிக்கினார். மேலும் ஒரு கட்டத்தில் சர்ச்சைக்குரிய படங்களை எடுக்க ஆரம்பித்து அதை பிரமோஷன் செய்ய வெளிநாட்டு நடிகைகளை வரவழைத்து தேவையில்லாத செயல்களில் ஈடுபட்டு நெட்டிசன்களிடம் சிக்கினார். இந்த செயல்தான் அவரின் பெயரை மட்டுமின்றி சினிமா வாழ்க்கையும் பாதித்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.