தென்மேற்கு பருவமழை கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடர்ந்து பெய்து வருகிறது. சொல்ல போனால் கடந்த மாதம் காட்டிலும் இந்த மாதம் நாடு முழுவதும் பரவலாக நல்ல மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வலுப்பெற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது. இதனால் சில இடங்களில் இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் கொடுத்துள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் தென்மேற்கு மத்தியப் பிரதேசத்தில் மிக கனமழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் மிதமான மழை முதல் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.