8 வயதில் 13 கிமீ கடந்து இடைநில்லா ஓட்டம் – சேலம் சிறுமி உலக சாதனை!!

0

பெண்கள் பாதுகாப்பு மற்றும் முன்னேற்றத்தை வலியுறுத்தி சேலத்தை சேர்ந்த பிரதா என்ற சிறுமி 13 கிமீ இடைநில்லா ஓட்டம் மேற்கொண்டார். சிறுமியின் இச்சாதனை உலக சாதனை புத்தகமான “நோபல் ப்ரைஸ் ஆப் வேர்ல்ட் ரெகார்ட்டில்” இடம்பிடித்துள்ளது.

உலக சாதனை:

சேலத்தை சேர்ந்த 3ம் வகுப்பு மாணவி பிரதா என்பவர் பெண்கள் நலம், பாதுகாப்பு மற்றும் முன்னேற்றம் ஆகிவைக் குறித்தும் கோவிட்-19 குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இடைநில்லா ஓட்டம் மேற்கொண்டார். சேலம் அடிவாரத்திலுள்ள ஒரு தனியார் பள்ளியிலிருந்து துவங்கிய இச்சாதனை ஓட்டத்தை சேலம் மாநகர காவல்துறை உதவி ஆணையாளர் சத்யமூர்த்தி கொடியசைத்து துவங்கி வைத்தார்.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக சம்மன்!!

அஸ்தம்பட்டி 5 ரோடு வழியாக காந்தி விளையாட்டு மைதானத்தில் நிறைவடைந்த இந்த சாதனை ஓட்டத்தில் அச்சிறுமி 13 கிமீ யை 1மணி நேரம் 16 நிமிங்களில் கடந்தார். சிறுமியின் இந்த முயற்சியை உலக சாதனையாக அங்கீகரித்த நோபல் ப்ரைஸ் ஆப் வேர்ல்ட் ரெகார்ட் அதனை பாராட்டும் விதமாக கேடயமும் சான்றிதழ்களும் வழங்கி கவுரவித்தது.

பள்ளி மாணவர்கள் வருகை கட்டாயமில்லை – கண்காணிப்பு குழு தலைவர் அறிவிப்பு!!

உலக அளவில் 8 வயதில் 13 கிமீ இடைநில்லா ஓட்டம் ஓடி உலக சாதனையாளர்கள் வரிசையில் ஒரு சிறுமி இடம் பிடிப்பது இதுவே முதல் முறை என்பது பாராட்டத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here