நாடு திரும்பியவுடன் எதிர்க்கட்சி தலைவர் அதிரடி கைது – ரஷியாவில் பரபரப்பு!!

0

விமான நிலையத்தில் வைத்து ரஷிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நவால்னியை அதிரடியாக கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் இந்த சம்பவம் குறித்து பிற நாட்டு தலைவர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.

அலெக்சி நாவல்னி:

ரஷிய நாட்டின் எதிர்க்கட்சி தலைவரான அலெக்சி நாவல்னி தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அவர் அங்கு இருக்கும் போது தற்போதைய அதிபரான புதினையும் மற்றும் அவரது அரசின் ஊழலை பற்றி கடுமையாக விமர்சித்தவர். இவர் தற்போது டாமஸ்க் நகரில் இருந்து மாஸ்க்கோவிற்கு விமானத்தில் பயணம் மேற்கொண்டுள்ளார். பயணத்தின் போது இவர் திடிரென்று மயங்கி விழுந்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் அலெக்சியை கொலை செய்வதற்காக சிலர் அவர் குடித்த டீயில் விஷம் கலந்திருக்கலாம் என்று கூறிவந்தனர். அவரை நோவிசோக் என்னும் நச்சு பொருளை பயன்படுத்தி தான் கொலை செய்ய முயற்சித்துள்ளார்கள் என்று பிரான்ஸ் மற்றும் சுவீடன் ஆய்வகங்கள் தெரிவித்துள்ளது. மேலும் அவருக்கு ரஸ்யாவில் வைத்து சிகிச்சை நடைபெற்றால் புதின் அரசு அவரை கொன்றுவிடும் என்று அலெக்சியின் ஆதரவாளர்கள் கூறிவந்தனர்.

அதிரடி கைது:

இதனால் அவர் ஜெர்மனியின் தலைநகரான பெர்லினில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டார். மருத்துவமனையில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. சிகிச்சை அளித்த பலனினால் அவரது உடல் நலம் சீரானது. தற்போது ரஷியாவிற்கு வந்தால் தனக்கு ஆபத்து ஏற்படும் என்ற தெரிந்த நிலையில் கூட அலெக்சி சிகிச்சைக்கு பின்பு ஜெரிமெட்வோ விமான நிலையத்தில் வந்து இறங்கினார். அங்கு வந்த போது ஓர் பரபரப்பான சம்பவம் ஏற்பட்டது. அங்க வந்து சேர்ந்ததும் பாஸ்போர்ட் சோதனை அலுவலகத்தில் வைத்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் – நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக சம்மன்!!

மேலும் விசாரணை முடிந்த பின்னர் அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பிரான்ஸ், இத்தாலி மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய நாடுகளில் இருக்கும் தலைவர்கள் இந்த சம்பவத்திற்கு தங்களது கண்டனங்களை தெரிவித்துள்ளனர். மேலும் அலெக்சியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் வருகின்றனர். மேலும் அவரை கொலை செய்வதற்காக நடத்தப்பட்ட திட்டம் குறித்து அனைவருக்கும் தெரியும் வகையில் வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் என்று ஜெர்மனி வலியுறுத்தி வருகிறது. தற்போது இந்த சம்பவம் குறித்து இரு நாடுகளுக்கு இடையே பிரச்சனைகள் நீடித்து வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here