ஊராட்சி ஒன்றிய தலைவர் பதவியை கைப்பற்றியது திமுக – தேமுதிக மற்றும் அமமுக ஆதரவு!!

0

பெரியகுளத்தில் நடந்த ஊராட்சி ஒன்றிய தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளது. அங்கு நடத்தப்பட்ட மறைமுக தேர்தலில் அமமுக மற்றும் தேமுதிக கட்சிகளின் ஆதரவோடு திமுகவை சேர்ந்த தங்கவேலு வெற்றி பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய தேர்தல்:

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் கடந்த ஒரு ஆண்டாக ஊராட்சி ஒன்றிய தேர்தல் நடத்த முடியாமல் இருந்த நிலையில் திமுக கவுன்சிலர் தங்கவேலு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் தேர்தலை நடத்த உத்தரவிடுமாறு மனு தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் பிப்ரவரி 15க்குள் தேர்தலை நடத்துமாறு உத்தரவிட்டது. 3 முறை தேதி குறிக்கப் பெற்றும் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டதை தொடர்ந்து நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்று சார் ஆட்சியாளர் சினேகா இந்த தேர்தலை நடத்தினார்.

சனிக்கிழமை விடுமுறை அளிக்க வேண்டும் – ஆசிரியர் சங்கம் வேண்டுகோள்!!

இந்த தேர்தலில் திமுகவை சேர்ந்த கவுன்சிலர்கள் 8 பேரும், அதிமுக கவுன்சிலர்கள் 6 பேரும், தேமுதிக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளை சேர்ந்த கவுன்சிலர்கள் தலா ஒருவரும் வெற்றி பெற்றனர். திமுக பெரும்பான்மை பெற்ற நிலையில் 7வது வார்டை சேர்ந்த தங்கவேல் மற்றும் 8வது வார்டை சேர்ந்த செல்வம் ஆகியோர் திமுக ஒன்றிய தலைவர் பதவிக்கு போட்டியிட்டனர்

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதை தொடர்ந்து நடந்த பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால் செல்வம் அதிருப்தியடைந்து அதிமுகவுக்கு சென்ற நிலையில் தேமுதிக கவுன்சிலர் அதிமுகவுக்கும், அமமுக கவுன்சிலர் திமுகவுக்கும் ஆதரவு அளித்தனர். அதன் பின்னான மறைமுக தேர்தலில் தேமுதிக மற்றும் அமமுக கட்சிகளின் ஆதரவை பெற்று திமுகவின் தங்கவேலு ஊராட்சி ஒன்றிய தலைவரானார். மொத்தமுள்ள 16 வாக்குகளில் 9 வாக்குகளை பெற்று தங்கவேலு வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here