WPL லில் RCB அணியின் முதல் வெற்றிக்கு பின்னுள்ள ரகசியம்…, முக்கிய பங்கு வகித்த விராட் கோலி!!

0
WPL லில் RCB அணியின் முதல் வெற்றிக்கு பின்னுள்ள ரகசியம்..., முக்கிய பங்கு வகித்த விராட் கோலி!!
WPL லில் RCB அணியின் முதல் வெற்றிக்கு பின்னுள்ள ரகசியம்..., முக்கிய பங்கு வகித்த விராட் கோலி!!

மகளிர் பிரீமியர் லீக்கில் மந்தனா தலைமையிலான RCB அணி தனது முதல் வெற்றியை பெற்றுள்ள நிலையில், அதற்கு பின் உள்ள ரகசியம் வெளியாகி உள்ளது.

RCB:

மகளிருக்கான பிரீமியர் லீக் (WPL) தொடரில், மந்தனா தலைமையிலான RCB அணியானது, தொடர்ந்து 5 போட்டிகளில் தோல்வி அடைந்து வந்து ரசிகர்களை மிகுந்த ஏமாற்றத்திற்கு தள்ளியது. இந்த தொடரில், நேற்று நடைபெற்ற UP வாரியர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், RCB அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று, WPLலில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த போட்டிக்கு முன்பாக, ஐபிஎல்லில் RCB அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி, மகளிர் RCB அணியினரை ஊக்கப்படுத்தும் விதமாக தனது கிரிக்கெட் வாழ்க்கையை குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது, 15 வருடங்களாக ஐபிஎல்லில் RCB அணிக்காக விளையாடி வருகிறேன். ஆனால், ஒரு முறை கூட கோப்பையை வெல்லவில்லை.

லெஜண்ட்ஸ் லீக்: அரைசதம் விளாசிய கிறிஸ் கெய்ல்…, இந்திய மஹாராஜாஸ் அணியை வென்ற வேர்ல்ட் ஜெயண்ட்ஸ்!!

ஆனாலும், ஒவ்வொரு சீசனிலும் அதற்கான போராட்டத்தை கைவிட்டதே கிடையாது. எங்களது இந்த போராட்டமே, RCB அணிக்கு உலக அளவில் அதிக ரசிகர்கள் இருக்க முக்கிய காரணமாகும் என்று கூறியுள்ளார். இதனை தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும், கோப்பையை வெல்லுவோமா என்பது தெரியாது. ஆனால், 110 சதவீதத்திற்கு மேல் நம்பிக்கையுடன் கோப்பையை வெல்ல முயற்சிக்க வேண்டும் என்று விராட் கோலி WPL RCB அணியினரிடம் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here