ரவீந்தர் மகாலட்சுமி தம்பதியிடம் , தொலைக்காட்சி தொகுப்பாளர் முக்தர் அஹமத் என்பவர், ஆபாசமான கேள்வி கேட்டதை கண்டித்து பாடலாசிரியர் ஜேம்ஸ் வசந்தன் பொங்கி எழுந்துள்ளார்.
பொங்கிய பிரபலம் :
அண்மையில் திருமணம் செய்து கொண்ட ரவீந்தர் மகாலட்சுமி பற்றிய ட்ரெண்டிங் கருத்துக்கள் தான், தற்போது சோசியல் மீடியாவில் பேசு பொருளாக உள்ளது. இவர்கள் இருவரும், பொருத்தமற்ற ஜோடிகள் என நெட்டிசன்கள் பலவாறு கருத்துக்களை பரப்பி வருகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில் இவர்கள் சமீபத்தில், ஒரு தனியார் சேனலுக்கு பேட்டிக்கு சென்ற போது , தொலைக்காட்சி நிருபர் முக்தர் அஹ்மத் என்பவர் அவர்களிடம் பல கொச்சையான கேள்விகளை கேட்டார். இது குறித்து கேள்விப்பட்ட பிரபல பாடலாசிரியர் ஜேம்ஸ் வசந்தன், நெறியாளர் முக்தரை பல மேடைகளில் பார்த்திருக்கிறேன்.
அவ்வளவு உணர்வுபூர்வமாக பேசக்கூடிய நெறியாளர், காசுக்காகவும் லைக்குக்காகவும் இவ்வாறு மட்டமான முறையில் பேசி இருப்பது கண்டனத்துக்குரியது. இதற்காக விரைவில் அவர் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையே பொது மக்களிடம் அவர் தர்ம அடி வாங்குவார் என எச்சரித்துள்ளார்.