நாடு முழுவதும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச அரிசி, மலிவு விலையில் உணவுப் பொருட்கள் என பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த சலுகைகளை வசதிபடைத்தவர்கள், தகுதியற்றவர்கள் போன்றோர்களும் பெற்று வருவதாக புகார் எழுந்த வண்ணம் உள்ளது. இதனால் ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ரேஷன் கார்டை புதுப்பிக்க வேண்டும் என சத்தீஸ்கர் மாநில அரசு அறிவுறுத்தி உள்ளது.
அதன்படி சத்தீஸ்கரில் வருகிற ஜனவரி 25ஆம் தேதி முதல் பிப்ரவரி 15ஆம் தேதி வரை ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் புதுப்பித்தல் பணியை தொடரலாம் என ரேஷன் அட்டைதாரர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். அதன் பின்னர் புதுப்பிக்கப்பட்ட புதிய ரேஷன் கார்டுகள் விநியோகிக்கப்படுவதாக கூறப்படுகிறது. இந்த பணிகளை பிப்ரவரி 29 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர்.