எதிர்நீச்சல் சீரியலில் தர்ஷினியை கரிகாலன், ஜான்சி ராணி தான் கடத்தி வைத்துள்ளார்கள் என ஈஸ்வரி போலீசில் கம்ப்ளைன்ட் கொடுக்கிறார். இதனால் அவர்களை கைது செய்ய போலீஸ் வீட்டுக்கு வருகின்றனர். இப்படி இருக்கையில் இன்றைய எபிசோடுகான ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவில் ஜான்சி ராணி, கரிகாலன் இருவரையும் போலீசார் தர்ஷினி எங்கே என்று கேட்டு அடி நொறுக்குகின்றனர். அந்த நேரத்தில் குணசேகரன் எதுக்கு இப்படி செய்றீங்க என்று கேட்க நாங்கள் குழந்தையை பற்றி தான் விசாரிக்கிறோம் என போலீஸ் சொல்கின்றனர்.
உடனே குணசேகரன் தர்ஷினி காணாமல் போனதற்கு ஜீவானந்தம் தான் காரணம். இதுக்கும் இவங்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது என்று சொல்லி கரிகாலன், ஜான்சியை ஜாமினில் அழைத்து செல்கிறார். அப்போது குணசேகரன் அவர்களிடம் என்ன நடந்தாலும் தர்ஷினியை உனக்கு தான் கல்யாணம் பண்ணி வைப்பேன் என்று சொல்கிறார். இதை கேட்ட கதிர் அண்ணே தர்ஷினி ரொம்ப சின்ன பொண்ணு. எதுக்கு நீங்க இப்படி பண்றீங்க என்று சொல்ல குணசேகரன் அதிர்ச்சியாகிறார். இந்தப் பக்கம் ஜனனி சாறுபாலாவிடம் தர்ஷினியை கண்டுபிடித்து தரும்படி உதவி கேட்கிறார். இத்துடன் இந்த ப்ரோமோ முடிவடைகிறது.