ரஞ்சி டிராபி தொடரில் அசாம் அணிக்கு எதிராக மும்பை அணியின் அசத்தலான பேட்டிங்கால் இமாலய ஸ்கோரை குவித்து அசத்தி உள்ளது.
ரஞ்சி டிராபி:
இந்தியாவில் நடைபெற்று வரும் ரஞ்சி டிராபி தொடரில், மும்பை அணி தங்களது அபாரமான ஆட்டத்தை தொடர்ந்து வெளிப்படுத்தி வருகின்றனர். இதுவரை 4 போட்டிகளில் விளையாடி உள்ள மும்பை அணி, 2 ல் வெற்றி தலா ஒரு போட்டியில் தோல்வி மற்றும் டிரா செய்தது உள்ளது. இந்த டிராபியின், 5வது போட்டியாக மும்பை அணி அசாம் அணிக்கு எதிராக விளையாடி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
நேற்று முதல் தொடங்கிய இந்த போட்டியில், முதலில் பேட்டிங் செய்த மும்பை அணி 4 விக்கெட் இழப்புக்கு 687 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்துள்ளது. இதில், எதிரணியின் பந்து வீச்சுக்கு சிம்மசொப்பனமாக திகழ்ந்த, பிரித்வி ஷா 49 பவுண்டரி 4 சிக்ஸர் உட்பட 379 ரன்கள் எடுத்து அசத்தி இருந்தார். இவரை போல, அஜின்கியா ரகானே 15 பவுண்டரி 2 சிக்ஸர் உட்பட 191 ரன்களை எடுத்துள்ளார்.
ஐசிசி தரவரிசை பட்டியல் வெளியீடு…, சூர்யகுமார் யாதவ், விராட் கோலி, ரோஹித் முன்னிலை!!
இதனால், 687 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்ததன் மூலம், தனது முதல் இன்னிங்ஸை முடித்துக் கொண்டது. இந்த இலக்கை துரத்த களமிறங்கிய அசாம் அணியில், சுபம் மண்டல் 40 ரன்களில் வெளியேறினார். இவரை தொடர்ந்து, ராகுல் ஹசாரிகா (60*), ரிஷவ் தாஸ் (26*) ரன்களுடன் களத்தில் உள்ளனர். இதன் மூலம், 2ம் நாள் முடிவில், அசாம் அணி ஒரு விக்கெட் இழப்புக்கு 129 ரன்களை எடுத்துள்ளது.