கல்வி அமைச்சருக்கு கொரோனா தொற்று – அதிர்ச்சியில் மக்கள்!!

0

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை மிக தீவிரமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது மத்திய கல்வி அமைச்சருக்கு கொரோனா நோய்த்தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

கொரோனா தொற்று:

நாட்டில் கொரோனாவின் இரண்டாவது அலை கடந்த ஆண்டின் முதல் அலையை விட மிக தீவிரமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறை மிக தீவிரமான நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது. அதேபோல் அனைத்து மாநிலங்களிலும் தற்போது தடுப்பூசி பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது நாட்டில் கொரோனா பாதிப்பு சுமார் 3 லட்சத்தை நெருங்கி வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் நாட்டு மக்கள் அனைவரும் தக்க கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்குமாறு அரசு அறிவுறுத்தி வருகிறது. நாட்டில் சமீப காலமாக அரசியல் தலைவர்கள், அமைச்சர்கள், முக்கிய பிரமுகர்களிடையே கொரோனா நோய்த்தொற்று கண்டறியப்பட்டு வருகிறது. இதனால் நாட்டில் உள்ள மக்கள் அனைவரும் அதிர்ச்சி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தற்போது மத்திய கல்வி அமைச்சரான ரமேஷ் பொக்ரியாலுக்கு கொரோனா தோற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பவானி இத்தனை நாட்கள் ஐஸ்வர்யாவிற்கு செய்த துரோகத்தை தெரிந்து கொள்ளும் சஹானா – விறுவிறுப்பாகும் “இதயத்தை திருடாதே”!!

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் ரமேஷ் பொக்ரியால் கூறியதாவது, நான் தற்போது கொரோனா பரிசோதனையை மேற்கொண்டேன். அதில் எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மருத்துவர்களின் அறிவுரைப்படி என்னை நான் தனிமைப்படுத்திக்கொண்டேன். என்னை தொடர்பு கொண்ட அனைவரும் பரிசோதனை மேற்கொள்ளுங்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here