கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் இன்று “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சிவாவை கொலை செய்ய வேண்டும் என்று சேது ஆட்களை ஏவி விடுகிறார். பின், ஐஸ்வர்யாவை சேது கோவிலில் அனைவர் முன்பும் வைத்து அடித்து விடுகிறார்.
“இதயத்தை திருடாதே” சீரியல்
இன்று “இதயத்தை திருடாதே” சீரியலில் இன்று சிவாவின் அப்பா ஐஸ்வர்யாவின் திருமணம் சரி வர நடக்காமல் போனாலும், பெண் வீட்டார் செய்யும் சடங்குளை சரியாக செய்ய வேண்டும் என்று சிவாவிடம் கூறுகிறார். சிவாவும் சரி என்று கூறிவிடுகிறார். சேது மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் விருந்துக்கு அழைக்க வேண்டும் என்றும் சிவாவும் அவர்களை அழைக்க வர வேண்டும் என்று கூறுகிறார். சிவா அதற்கு மறுப்பு தெரிவித்து விடுகிறார். பின், சஹானா மற்றும் வள்ளி இருவரும் கோவிலுக்கு செல்கின்றனர்.
14 வயது பெண்ணை கற்பழித்த “டிக் டாக்” பிரபலம் – அதிர்ச்சியில் ரசிகர்கள்!!
அங்கு சேது, தாட்சயினி மற்றும் ஐஸ்வர்யா மூவரும் வருகின்றனர். சஹானாவை பார்த்த சந்தோஷத்தில் ஐஸ்வர்யா அவரை கட்டி அணைத்து கொள்கிறார். இது சேது மற்றும் தாட்சயினி இருவருக்கும் கோபத்தினை வரவழைக்கிறது. இதனை அடுத்து, சேது அனைவர் முன்பாகவும் ஐஸ்வர்யாவை அடித்து விடுகிறார். இதனை பார்த்தும் ஒன்றும் செய்ய முடியாத நிலையில் சஹானா மற்றும் வள்ளி இருவரும் இருக்கின்றனர்.
பின், சேது சிவாவை கொலை செய்ய ஆட்களை ஏவி விடுகிறார். அவர்களிடம் இருந்து சிவா தப்பித்து விடுகிறார். இப்படியாக இருக்க, கோதண்டம் மற்றும் பவானி இருவரும் ஐஸ்வர்யா மற்றும் சேது இருவருக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றது, குலதெய்வ கோவிலில் பத்திரிகை வைத்து கும்பிட்டது பற்றி பேசுகின்றனர். இதனை தூரத்தில் இருந்து வள்ளி மற்றும் சஹானா இருவரும் கேட்டு அதிர்ச்சி அடைந்து விடுகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அதே போல் சஹானா தனது மாமியாரை சரமாரியாக திட்டி விடுகிறார். அதே போல் இந்த விஷயத்தினை சிவா மற்றும் சிவாவின் அப்பாவிடம் கூற மாட்டேன் என்றும் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.