டிக் டாக் பிரபலம் ஒருவர் 14 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து அவரை கர்ப்பமாக்கி உள்ள சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து இந்த செய்தி அவரது ரசிகர்கள் மற்றும் மக்களுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
டிக் டாக் பிரபலம்
தற்போதைய காலத்தில் இளைஞர்கள் பலரும் அதிகமாக பயன்படுத்துவது, சமூகவலைத்தளங்களை தான். அந்த வகையில் மிகவும் பிரபலமான செயலியாக இருந்தது, டிக் டாக் தான். இதில் விடீயோக்களை பதிவிட்டு பலரும் மக்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளனர். ஆனால், கடந்த ஆண்டு இந்திய அரசு இந்த செயலியினை இந்தியாவில் தடை செய்தது.
#SRHvsPBKS ஐபிஎல் போட்டி – டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்த பஞ்சாப் அணி!!
இந்த செயலியின் மூலமாக பிரபலமடைந்தவர் தான், பார்கவ். இவர் ஆந்திரா மாநிலத்தினை சேர்ந்தவர் ஆவார். இவர் “ஓ மை காட், பேபி” என்ற டிக் டாக் விடீயோவின் மூலமாக இவர் மிகவும் பிரபலம். இதனை அடுத்து இவருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இப்படியாக இருக்க, இவரது விடியோவை பார்த்து பலரும் மெசேஜ் செய்துள்ளனர். அதில் ஒரு 14 வயது பெண்ணிற்க்கு இவரது தொடர்பு கிடைத்துள்ளது. இருவரும் ஒன்றாக இணைத்து பல விடீயோக்களை பதிவிட்டுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இப்படியாக இருக்க, இந்த பெண்ணை பார்கவ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். அதே போல பல விடீயோக்களை எடுத்து அதனை வைத்து அவரை மிரட்டியும் உள்ளார். இதனை அடுத்து அந்த பெண் தற்போது 4 மாத கர்ப்பிணியாக உள்ளாராம்.
இவர் மேல் புகார் அளிக்கப்பட்டு தற்போது இவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் அனைத்து தரப்பினரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.