மக்கள் டிவியில் தொகுப்பாளினியாக தனது முதல் படியை தொடங்கியவர் சின்னத்திரை நடிகை சித்ரா. இவரின் தற்கொலையில் தொடர்ந்து பல மர்மங்கள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் தற்போது விஜய் டிவி பிரபலமான ரக்சன் சித்ராவை வீடியோ எடுத்து மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சித்ரா தற்கொலை மர்மம்
சின்னத்திரை நடிகையான சித்ரா தனது 8 வருட போராட்டங்களுக்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அதில் சிறக்கவும் செய்தார். முல்லை கதாபாத்திரத்தில் இவரின் நடிப்பு பிரமாதம் என்றே சொல்லலாம். மேலும் மக்கள் மத்தியிலும் முல்லைக்கு தனி வரவேற்ப்பே இருந்தது.
அனைவரும் சித்ராவை தங்கள் வீட்டு பெண்ணாகவே பார்த்து வந்தனர். தனது தாய் தந்தைக்காக தனி ஆளாக சம்பாதித்து வீடு கட்டியவர். இப்படி சிங்கபெண்ணாக இருந்த சித்ரா இப்படி தற்கொலை செய்துக்கொண்டதை யாராலும் நினைத்து கூட பார்க்க முடியவில்லை.
இவருக்காக தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலையே மக்கள் பார்த்து வந்தனர். இதனால் முல்லை கதாபாத்திரத்தை கொன்று விடும் படி அவரது ரசிகர்கள் கதறி வருகின்றனர். இந்நிலையில் தற்போது ஒரு புதிய செய்தி வெளியாகியுள்ளது. அதாவது விஜய் டிவி பிரபலமான ரக்சன் சித்ராவை மிரட்டி வந்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது. சித்ராவும் ரக்சனும் காதலித்து வந்துள்ளனர்.
இதனால் அவர்கள் ஒரு ரெசார்ட்டில் தனியாகவும் தங்கியுள்ளனர். இருவரும் ஒன்றாக இருந்ததை ரக்சன் வீடியோ எடுத்து மிரட்டி வந்துள்ளார். சித்ராவிற்கு திருமணம் ஆன பின்னும் தான் கூப்பிடும்போது வரவில்லை என்றால் இதனை வலைத்தளங்களில் போட்டு விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார்.
இதனை சித்ராவின் தோழி வீடியோ மூலம் தெரிவித்துள்ளார். இதனால் பலரும் ரக்சனை திட்டி தீர்த்து வருகின்றனர். நல்லவன் போல வேஷம் போட்டு இப்படி ஒரு அய்யோக்கியனாக இருந்து இருக்கிறாரே ரக்சன் என பலரும் கொதித்தெழுந்து வருகின்றனர். ஆனால் ரக்சன் தரப்பில் இருந்து எந்த எதிர்ப்பும் இது வரையில் வரவில்லை.