இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலிய அணியுடன் நாளை முதல் டெஸ்ட் போட்டியில் மோத உள்ளது. இந்நிலையில், இந்திய அணியின் இளம் வீரர் பிருத்வி ஷாவின் ஆட்டத்தை பார்க்க ஆர்வமாக உள்ளதாக தெரிவித்துள்ளார் கேப்டன் விராட் கோஹ்லி.
டெஸ்ட் தொடர்:
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்ட் கிரிக்கெட் மைதானத்தில் நாளை நடைபெறுகிறது. முதல் டெஸ்ட் போட்டி நடைபெற உள்ளது. நான்கு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி பகலிரவு ஆட்டமாக நடைபெற உள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
இந்திய அணியின் இளம் வீரர் பிருத்வி ஷா இந்த போட்டியில் கலந்து கொள்ள உள்ளார். அவரை பற்றி கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், முதல் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். அவரது ஆட்டத்தை பார்க்க மிகவும் ஆரவத்துடன் இருக்கிறேன். பிருத்வி ஷா பயிற்சி ஆட்டத்தில் நன்றாக விளையாடவில்லை.
ஆஸ்திரேலியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி – இந்திய அணி அறிவிப்பு!!
இருப்பினும் இந்திய அணியின் நிர்வாக குழுவினரின் நம்பிக்கையை பெற்று இந்த தொடரில் விளையாட உள்ளார். மேலும் இன்னொரு இளம் வீரர் சுப்மன் கில் அவருக்கான வாய்ப்பு கிடைக்கும் போது நிச்சயம் அவரும் அவரது திறமையில் ஆட்டத்தில் ஜொலிப்பார் என தெரிவித்துள்ளார்.