ராஜஸ்தானில் சதம் அடித்த பெட்ரோல் விலை – வருத்தத்தில் வாகன ஓட்டிகள்!!

0

கடந்த சில நாட்களாகவே இந்தியாவில் பெட்ரோல் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போது ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் கவலை அடைந்துள்ளனர்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்:

பெட்ரோல் மற்றும் டீசலின் விலை நாள்தோறும் எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெயின் விலைகேற்ப, அமெரிக்க டாலரின் இந்திய மதிப்பு மற்றும் இறக்குமதி செலவு ஆகியவற்றை கணக்கில் கொண்டு மாற்றி அமைத்து வருவார்கள். மேலும் புதிய விலை அன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வரும். கடந்த சில நாட்களாகவே பெட்ரோல் மற்றும் டீசலின் விலை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது இன்றைய நிலவரப்படி ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.100 ஐ தாண்டியுள்ளது. இதனை தொடர்ந்து ராஜஸ்தான் மாநிலம் ஸ்ரீகங்கா நகரில் தற்போது 1 லிட்டர் பெட்ரோல் ரூ.100.13 ஆக விற்பனை செய்யப்படுகிறது. மேலும் ராஜஸ்தான் மாநிலத்தில் கடந்த மாதம் தான் பெட்ரோல் மற்றும் டீசலின் மீதான வாட் வரியின் 2 ரூபாய் குறைத்தனர். இருந்தும் தற்போது பெட்ரோல் விலையில் 100ஐ தாண்டியுள்ளது. மேலும் டிசலும் தற்போது லிட்டர் ரூ.93.16 ஆக விற்பனை செய்யப்படுகிறது.

‘கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் ஒருவர் கூட உயிரிழக்கவில்லை’ – மத்திய அரசு தகவல்!!

இதேபோல் தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் பெட்ரோல் லிட்டர் ரூ.99 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் அங்கேயும் பெட்ரோல் விலையில் சதம் அடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது இந்த தொடர் விலை உயர்வினால் வாகன ஓட்டிகள் மிகுந்த கவலை அடைந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here