தமிழகத்தில் புதிதாக கட்டப்படவுள்ள எண்ணெய் நிறுவனங்கள் உட்பட சில திட்டங்களுக்கு இந்திய பிரதமர் மோடி டெல்லியிலிருந்து காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டியுள்ளார்.
பிரதமர் மோடி அடிக்கல் நாட்டு
தமிழகத்தில் ராமநாதபுரம் மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களுக்கு இடையேயுள்ள ஒரு பகுதியில் ரூ.700 கோடி மதிப்பில் புதிதாக எண்ணெய் நிறுவனங்கள் கட்டப்படவுள்ளது. இதன்படி எண்ணெய் நிறுவனங்களுக்கான எரிவாயு குழாய் இணைப்பு திட்டம் இன்று பிரதமர் மோடி அவர்களால் காணொளி வழியாக திறந்து வைக்கப்பட்டது. டெல்லியிலிருந்தவாரே பிரதமர் மோடி காணொளி வாயிலாக திட்டத்தை துவக்கி வைத்தார். இந்நிலையில் ராமநாதபுரத்திலிருந்து தூத்துக்குடி மாவட்டம் வரை 143 கிலோ மீட்டர் தொலைவுக்கு எரிவாயு குழாய் அமைக்கப்படவுள்ளது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
‘எனக்கு பிடித்த நடிகர் எப்போவுமே விஜய் தான்’ – நடிகை காஜல் அகர்வால் பளிச் பேட்டி!!
மேலும் நாகப்பட்டினத்தில் ரூ31,500 கோடி செலவில் காவிரிப்படுகை அருகே கட்டப்படவுள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைக்கும் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து சென்னை மணலி பகுதியில் உள்ள பெட்ரோலியம் நிறுவனத்தின் கேசோலின் சல்பர் நீக்கப்பிரிவு திட்டத்தையும் காணொளி வழியாக துவங்கி வைத்தார். ரூ500 கோடி செலவில் அமையவுள்ள கேசோலின் சல்பர் நீக்க திட்டத்தின் மூலம் சுற்றுச்சூழல் மாசுபாட்டைக் குறைக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.