சந்தியாவிடம் நெருங்க முயற்சிக்கும் சரவணன் – காதல் காட்சிகளுடன் வெளியான ‘ராஜா ராணி 2’ ப்ரோமோ!!

0

விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியலில் ராஜா ராணி 2 சீரியலும் ஒன்று. எப்படியோ சந்தியாவின் அண்ணன் தன் சுயநலத்திற்காக சந்தியாவை ஏமாற்றி சரவணனுக்கு கல்யாணம் செய்து வைக்கிறார். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று ஆவலுடன் காத்திருப்பவர்களுக்கு விஜய் டிவி ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.

ராஜா ராணி 2

ராஜா ராணி 2 சீரியலில் அண்ணன், அண்ணிக்காக தனது கனவினை தியாகம் செய்து கல்யாணம் முடிந்து சரவணன் வீட்டிற்கு வருகிறார் சந்தியா. வீட்டை திறக்கும் நேரத்தில் வீடு முழுவதும் தண்ணீரால் நிரம்பி இருக்க சிவகாமி சந்தியாவை வேலை பார்க்க சொல்லி மிரட்டுகிறார். சுத்தம் செய்து கொண்டிருக்கும் போது சந்தியா காலில் ஏதோ குத்த வேற சரவணன் பதறியடித்து அவருக்கு காலில் மறுத்தும் தடவினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் முதலிரவு அறையில் சந்தியா தனது இலட்சியத்தை சரவணனிடம் கூறி எப்படியாவது படிக்க வேண்டும் என்று நினைக்கிறார். சரவணனிடம் இதைப்பற்றி சொல்ல வரும் வேளையில் வெளியில் இருப்பவர்கள் கதவை தட்ட கடைசியில் முதலிரவே கேன்சல் ஆகிறது.

அந்த வீட்டில் எப்படி நடந்து கொள்வது என்று கூட தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கும் சந்தியாவிற்கு பக்கபலமாகவே உள்ளார் சரவணன். படிப்பு என்று அதிலேயே கவனம் செலுத்தி வந்த சந்தியாவிற்கு வீட்டில் வேலை பார்ப்பது கொஞ்சம் கூட தெரியாது. இந்நிலையில் காலையில் விடிந்ததும் குளிக்க செல்லும் சந்தியா ஹீட்டர் இல்லாததை பார்த்து அதிர்ச்சி ஆனார்.

இதனை சரவணனிடம் தெரிவிக்கவே அவர் சுடுதண்ணீர் எல்லாம் வைத்து கொடுக்கிறார். சந்தியாவிற்கு சரவணன் மேல் ஒரு நல்ல அபிப்ராயமும் ஏற்படுகிறது. மேலும் சந்தியாவின் அண்ணன் மணி, இதுவரையிலும் வெளிநாட்டு கனவிலேயே சுயநலமாகவே யோசித்துக் கொண்டுள்ளார். தற்போது ப்ரோமோ ஒன்று வெளியாகியுள்ளது.

Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அடிக்கடி ராஜா ராணியில் சின்ன சின்ன ரொமான்ஸ் சீன் நடந்துகொண்டு தான் உள்ளது. இப்பொழுதும் அதே போல சந்தியா சுடிதார் அணிந்து உட்கார்ந்திருக்க சிவகாமி சுடிதார் எல்லாம் இங்கே போடக் கூடாது என்று கூறுகிறார். சில புடவைகளை கொடுத்து அதை கட்ட சொல்கிறார்.

அந்த சமயத்தில் உள்ளே வரும் சரவணன் சந்தியாவிற்கு என்ன புடவை அழகாக இருக்கும் என்று வைத்து பார்த்து ரோஸ் கலர் புடவையை கட்ட சொல்கிறார். சந்தியா சேலை கட்டுவதற்காக சரவணனை வெளியே போக சொல்ல சரவணனுக்கு வெட்கமும் வருகிறது.

ஆனால் சந்தியா இப்பொழுதும் குழப்ப நிலையிலேயே உள்ளார். சந்தியா சரவணனை கணவராக ஏற்பாரா?? சந்தியாவின் கனவுகளை சரவணன் நிறைவேற்றுவாரா?? என்பதை வரும் எபிசோடுகளில் பொறுத்திருந்து பாப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here