விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் தொடர்ந்து விறுவிறுப்பான சம்பவங்கள் நடந்து வருகிறது. இந்நிலையில் சந்தியா வென்ற பரிசு தொகையை வைத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக்கொண்டுள்ளனர்.
ராஜா ராணி 2
ராஜா ராணி 2 இல் தொடர்ந்து பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் தற்போது காலையிலேயே ஆதியும் பார்வதியும் தனது பஞ்சாயத்தை ஆரம்பித்து விட்டனர். சந்தியா ஜெயித்து கொண்டு வந்த பணத்தை என்ன செய்வது என்று கேட்கின்றனர். ஆதி அந்த பணத்திற்கு கார் வாங்கலாம் என்று சொல்கிறார். இதனால் வீட்டில் உள்ளவர்கள் திட்டுகின்றனர்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
அடுத்ததாக பார்வதி தனக்கு நகை வாங்கலாம் என்று சொல்கிறார். மேலும் சரவணன் வேறு தனது கடையை விரிவு படுத்த வேண்டும் என்று அந்த பணத்தை கேட்கிறார். இது எதற்கும் சிவகாமி ஒத்துக்கொள்ள வில்லை. அடுத்ததாக சந்தியா இதனை பேங்கில் அத்தை பெயரில் போட்டு வைத்து கொள்ளலாம் என்றும் கூற அனைவரும் சம்மதிக்கின்றனர்.
அதன் பிறகு பார்வதி விக்கியை பார்க்க கிளம்புகிறார். வழியில் வரும்போது போன் கீழே விழுந்து விடுகிறது. விக்கி பார்வதிக்காக காத்துக்கொண்டுள்ளார். பார்வதிக்கு கால் செய்ய சுவிட்ச் ஆப் என்று வருகிறது. பார்வதியை தேடி கிளம்பி செல்கிறார் விக்கி. அதன் பிறகு பார்வதி பஸ் ஸ்டாப் வருகிறார்.
விக்கியை தேட ஒருவன் தன்னையே பார்த்துக்கொண்டிருப்பதால் பயந்து விடுகிறார். அங்கிருந்து செல்ல அவனும் பின் தொடருகிறார். கடைசியில் விக்கியை பார்த்து விடுகிறார். அதன் பிறகு தான் வீட்டிற்கு செல்வதாக சொல்லி சென்று விடுகிறார். விக்கிக்கு என்ன நடந்தது என்றே புரியவில்லை.
அடுத்து வீட்டிற்கு சென்றதும் விக்கி கால் செய்து பேசுகிறார். பார்வதி பஸ் ஸ்டாப்பில் நடந்தவற்றை கூறுகிறார். இதனால் விக்கி செம கோவமாகிறார். மேலும் முக்கியமான விஷயத்தை பற்றி பேசணும் அடுத்து நேரில் வந்து சொல்வதாக சொல்கிறார்.
உலக நாயகனின் “விக்ரம்” படத்தில் பிரபல மலையாள நடிகர் – தீயாய் பரவும் செய்தி!!
அடுத்ததாக சந்தியா சரவணனை பார்க்க கடைக்கு செல்கிறார். முகத்தில் இருக்கும் கரியை துடைக்க சொல்ல அது சந்தியாவின் கன்னத்திலும் ஒட்டி விடுகிறது. இப்படி சந்தோசமாக இருப்பதை பார்வதி பார்த்து வயிறு எறிகிறார். சந்தியாவிடம் ஸ்வீட் கொடுத்து வீட்டில் உள்ள அனைவர்க்கும் கொடுக்க சொல்கிறார்.
அதனை பார்வதி சிவகாமியிடம் வந்து வேறு விதமாக சொல்கிறார். இந்த ஸ்வீட்டை வீட்டில் யாருக்கும் தரவேண்டாம் என்று சொல்லியதாக சொல்கிறார். இதனை சிவகாமி நம்பி விட சந்தியா வந்ததும் என்ன ஏது என்று கூட கேட்காமல் திட்டுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைகிறது.