விஜய் டிவியில் பிரபல தொகுப்பாளராக இருந்த ரக்சன் இத்தனை வருடங்களுக்கு பிறகு தனது மனைவியை பிரபல நிகழ்ச்சி ஒன்றிற்கு அழைத்து வந்துள்ளார். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
ரக்சன்
விஜய் டிவியில் வெளியான ‘கலக்கப்போவது யாரு’ என்ற நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் ரக்சன். இவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் இருந்தாலும் இவரது திறமையால் மக்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்தார். விஜய் டிவியில் அடுத்தடுத்து பல ஷோவை தொகுத்து வழங்க ஆரம்பித்தார்.ஆனால் அனைவருக்கும் பெரிய ஷாக் என்றால் அது ரக்சனுக்கு திருமணம் ஆகி 7 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டதாம்.
இதுவரையிலும் அவருக்கு கல்யாணம் ஆன விஷயத்தை யாரிடமும் பகிர்ந்துக்கொள்ளவும் இல்லை. மேலும் இது காதல் திருமணமாம். ஆரம்பத்தில் இவரும் ஜாகுலினும் தான் காதலித்து வந்ததாக சொல்லப்பட்டது. ஆனால் இருவரும் நண்பர்கள் மட்டும் தான் என பகிரங்கமாக தெரிவித்திருந்தனர். விஜய் டிவி மூலம் ரக்சனுக்கு படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சித்ரா விஷயத்தில் கூட ரக்சன் பல பிரச்சனைகளை சந்தித்தார்.
அதாவது சித்ராவை மிரட்டியது ரக்சன் தான் என்றும் சொல்லப்பட்டது. இதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லை. என் பெயரை தேவையே இல்லாமல் இழுக்க வேண்டாம் என்றும் கூறியிருந்தார். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இத்தனை நாட்கள் தனது மனைவியை எந்த நிகழ்ச்சிக்கும் அழைத்து வராத ரக்சன் விஜய் டெலிவிஷன் அவார்ட் நிகழ்ச்சிக்கு அழைத்து வந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.