டிசம்பர் 28 ஆம் தேதி கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் தகவல்!!

0

தமிழகத்தில் உள்ள தென் மாவட்டங்களில் வரும் 28 ஆம் தேதி இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த இரு தினங்களுக்கு மீனவர்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வறண்ட வானிலை:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வறண்ட வானிலை பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் காணப்படுகிறது. இந்த நிலையில் வரும் 28 ஆம் தேதி தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் சில இடங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 28 ஆம் தேதி தென் கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரம் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வெப்பநிலை குறைந்தபட்சமாக 21 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்றும் அதிகபட்சமாக 29 டிகிரி செல்சியஸ் இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கோவை மாவட்டத்தில் உள்ள சின்னக்கல்லார் பகுதியில் 4 செ.மீ, வால்பாறை பகுதியில் 3 செ.மீ, சின்கோனா பகுதியில் 2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக சோலையூர், சித்தார் பகுதியில் 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

வலை பயிற்சியில் மீண்டும் ரஹானே & புஜாராவை காலி செய்த நடராஜன்!!

வங்கக்கடல் பகுதிகளில் உள்ளவர்களுக்கு எந்த வித எச்சரிக்கையும் விடுக்கப்படவில்லை. அரபிக் கடல் பகுதியில் உள்ளவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 24 மற்றும் 25 ஆம் தேதிகளில் தென் கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 55 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here