‘சித்துவை தவிர வேறு யாரையும் எங்களால ஏத்துக்க முடியாது’ – கதறும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ ரசிகர்கள்!!

0

சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்டதால் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் தற்போது பாரதி கண்ணம்மா சீரியலில் அறிவாக நடிக்கும் காவியா நடித்து வருகிறார். இந்நிலையில் சித்துவை தவிர வேறு யாரையும் எங்களால் நினைத்து பார்க்க முடியாது என அவரது ரசிகர்கள் கதறி வருகின்றனர்.

‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ முல்லை:

பாண்டியன் ஸ்டோர்ஸ் மக்கள் மத்தியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல் ஆகும். இதில் முல்லை கதாபாத்திரத்திற்கே முக்கியத்துவம் அளிக்கப்பட்டது. கூட்டு குடும்ப கதை என்பதால் இந்த சீரியல் ஆரம்பித்த சில நாட்களிலேயே மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மேலும் முல்லை, ஜீவாவை காதலிக்க திருமணம் ஆகும் வேளையில் மீனா வந்து தடுத்ததால் கதிரை திருமணம் செய்து கொள்ளும் சூழல் ஏற்படுகிறது. ஆரம்பத்தில் மோதலாக இருந்த இவர்களின் உறவு நாளடைவில் காதலாக மாறியது. இந்த இரண்டு ஜோடியையும் மக்களுக்கு பிடித்தும் போனது. கதிர் முல்லைக்காகவே இந்த சீரியலை பார்க்க ஆரம்பித்தனர்.

சித்ரா மரண வழக்கு விசாரணை, 250 பக்க குற்ற அறிக்கை தயார்!!

சித்ராவிற்கு இந்த ஒரு நல்ல வாய்ப்பாக அமைய வாய்ப்புகள் குவிந்தது. ஆனால் எதிர்பாராத விதமாக சித்ரா தற்கொலை செய்துகொண்டார். இது அவரின் ரசிகர்களை பெரிதும் பாதித்தது. சித்ராவின் காட்சிகள் 22 தேதி வரை ஒளிபரப்பப்பட்டது. அதுவரையிலும் சித்ராவை கண்டுகளித்தனர்.

இந்நிலையில் சித்ரா இறந்ததை அடுத்து காவியா அந்த கதாபாத்திரத்தில் முல்லையாக வருகிறார். இதனை அவரின் ரசிகர்களால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. ஏற்கனவே முல்லை கதாபாத்திரத்தை கொன்று விடுங்கள் என்று கூறி வந்தனர். ஆனால் சீரியலில் அப்படி செய்ய முடியாதல்லவா. இப்பொழுது காவியா நடித்திருப்பதை பார்த்த பலரும் அவரை ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர். பலரும் இதனை ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here