நாடு முழுவதும் மத்திய மற்றும் மாநில அரசு ஊழியர்கள் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என தொடர்ந்து பல்வேறு கோரிக்கைகளை வைத்த வண்ணம் உள்ளனர். ஆனால் தற்போது வரை இதற்கு முடிவு எட்டியப்பாடு இல்லை. இப்படி இருக்கையில் தற்போது ரயில்வே ஊழியர்கள் அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளனர். அதாவது நாடு முழுவதும் உள்ள ரயில்வே ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது தொடர்பாக வரும் 20, 21 ஆம் தேதிகளில் ஊழியர்களிடம் கலந்தாலோசிக்க உள்ளார்களாம். இதன் முடிவில் நாடு தழுவிய போராட்டத்திற்கு ஊழியர்கள் ஆதரவு தெரிவித்தால் உடனே வேலை நிறுத்தம் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளனர். ஒரு வேலை ரயில்வே ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டால் நிச்சயம் பயணிகள் பெரிதளவில் பாதிக்கப்படுவார்கள். இதனால் இதற்கு மத்திய அரசு நல்ல முடிவு எடுப்பார்கள் என்று தான் தெரிகிறது.