கொரோனா காலகட்டத்தில் பிரதமர் மோடி அரசின் சாதனைகள் நமஸ்தே ட்ரம்ப் நிகழ்ச்சியையும் ராஜஸ்தான் ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சியையும் குறிப்பிட்டு காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கிண்டலடித்துள்ளார்.
ராகுல் விமர்சனம்..!
கொரோனா காலத்தில் மத்திய அரசு திட்டமிடல் இல்லாமல் செயல்பட்டு வருவதாக அவ்வப்போது ராகுல் காந்தி ட்விட்டரில் மோடி அரசை விமர்சித்து வருகிறார். இந்நிலையில் நடப்பாண்டில் மோடி அரசின் சாதனைகளை கடும் கிண்டலை விமர்சித்துள்ளார்.
தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா – இணை செயலாளராக பிரதமர் அலுவலகத்தில்..!!
இது குறித்து அவர் ட்வீட்டரில் வெளிட்டுள்ளதாவது, பிப்ரவரியில் நமஸ்தே ட்ரம்ப், மார்ச்சில் ம.பி. அரசைக் கவிழ்த்தது, ஏப்ரலில் மக்களை மெழுகு வர்த்தி ஏற்றச்செய்தல், மே மாதத்தில் பாஜக அரசின் 6வது ஆண்டு கொண்டாட்டம், ஜூன் மாதத்தில் பிஹார் மெய்நிகர் பேரணி, ஜூலையில் ராஜஸ்தான் அரசைக் கவிழ்க்கும் முயற்சி. இந்தச் சாதனைகளினால் கொரோனா வைரஸ்சுக்கு எதிரான போராட்டத்தில் தற்சார்பு எய்தியது எனத் தெரிவித்துள்ளார்.