வெப்பச்சலனம் காரணமாக சில மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
மழைக்கான அறிகுறி:
கடந்த சில நாட்களாக பல இடங்களில் மழை பெய்ந்து வருகிறது. இந்த மாதத்தின் ஆரம்பநாட்களில் இருந்து பல மாவட்டங்களில் மழைக்கான அறிகுறிகளும் காணப்பட்டு வந்தது.
அதில் தற்போது, சென்னை வானிலை ஆய்வு மையம் பரவலாக 11 மாவட்டங்களில் மழை அதுவும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தெரிவித்து உள்ளது.
எந்த எந்த மாவட்டம்:
நீலகிரி, கோவை, திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், மதுரை, ஈரோடு, கரூர் போன்ற மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும், சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும் என்று தெரிவித்து உள்ளனர்.